தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. முகக்கவசம், தனிமனித இடைவெளிக்கு வலியுறுத்தல்.!
Tamilnadu Govt Announce till 31 March 2021 Lockdown Extended
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, தற்போது வரை மாதாமாதம் தளர்வுகளுடன் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்படுகிறது. அவ்வப்போது சூழ்நிலைக்கேற்ப கட்டுப்பாடுகளும் அதிரடியாக விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறையுடன் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், பொது இடங்களுக்கு வரும் நபர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், மேலைநாடுகளில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் போல தமிழகத்திலும் ஏற்படாமல் இருக்க மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், பொது இடங்களுக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tamilnadu Govt Announce till 31 March 2021 Lockdown Extended