#Breaking: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு.. தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு.!!
Tamilnadu Lockdown extended till 31 August 2020
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனாவின் தாக்கமானது கட்டுக்குள் அடங்காத வகையில் உச்சம் பெற்றுள்ளது. இதனால் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆறாவது ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில் கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளில் எந்த விதமான தளர்வும் இல்லை என்றும் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tamilnadu Lockdown extended till 31 August 2020