10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு?.. பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை..!
Tamilnadu School Educational Ministry discuss about Postponed SSLC Public Exam due to TN Poll
தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகும் தருணத்தில், 10 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதில் சிரமம் ஏற்படும் என்பதால், பொதுத்தேர்வுகளை ஒத்தி வைக்கலாமா? என்ற ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் 9 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரியவருகிறது.
மேலும், இந்த தேர்வுகளில் 100 மாணவர்களுக்கும் குறைவாக தேர்வு எழுதும் மையங்கள் இருந்தால், அந்த பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது என்றும், அவர்கள் அருகில் உள்ள பிரதான மையத்தில் தேர்வு எழுத வழிவகை செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியாக, 100 மாணவர்களுக்கும் கீழ் உள்ள பள்ளிகள் குறித்த தகவல் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் இதனை அடிப்படையாக கொண்டே நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆனால், கொரோனா பரவல் அச்சம் காரணமாக மாணவர்கள் பிற பள்ளிகளுக்கு செல்ல தயக்கம் இருப்பதால், அந்தந்த பள்ளிகளில் தேர்வுகளை நடத்த வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் எழுந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
அதிகளவு தேர்வு மையங்கள் இருக்கும் பட்சத்தில் தேர்வு கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் என ஆட்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து செல்லும். இதனைப்போல சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பும் எப்போது வேண்டும் என்றாலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுவதால், 10 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதில் சிரமம் ஏற்படும். இதனால் பொதுத்தேர்வுகளை ஒத்தி வைக்கலாமா? என்ற ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Tamilnadu School Educational Ministry discuss about Postponed SSLC Public Exam due to TN Poll