தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். 

தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கி விட்டதால் தமிழகத்தின் வட உள் மாவட்டங்களான சேலம், காஞ்சிபுரம், நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 10 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் முதல் 7 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வைத்துள்ளது. 

மேலும் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று வெப்ப அலை வீசப்படும் என்பதால் 'மஞ்சள் எச்சரிக்கை' விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் நாளை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu today 7 districts heavy rain


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->