காதலித்து ஆசை ஆசையாய் திருமணம்.. மூன்றே நாளில் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் மூன்றே நாளில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் கருத்த பாண்டி என்பவருக்கு கௌசல்யா என்ற மகள் இருந்துள்ளார். இருவரும் காதலித்து கடந்த ஏழாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், நேற்று கார்த்திக் வேலைக்கு சென்று திரும்பி வீட்டிற்கு சென்று பார்த்தபோது மின்விசிறியில் கௌசல்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு ஊசலாடிய நிலையில் மனைவி தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், கார்த்திக் அவரை மீட்டு சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே கௌசல்யா உயிரிழந்து விட்டார். திருமணமான மூன்றே நாளில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thenkasi Sangaran Kovil Couples married and That women was Death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->