தாலியின் ஈரம் காய்வதற்குள்.. கொலை செய்யப்பட்ட இளம்பெண்.! தென்காசியில் கொடூரம்.! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் பகுதிக்கு அருகில் துப்பாக்குடி என்ற ஊர் இருக்கிறது. இந்த ஊரின் ஓடையில் ஒரு இளம் பெண் கழுத்தறுப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து, ஆழ்வார்குறிச்சி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தியதில் 23 வயது பெண் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது. 

அவரை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துவிட்டு, இவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசார், மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் கல்லிடைக்குறிச்சி பகுதியில் வசிக்கும் இசக்கி முத்து என்பவரின் மகள் இசக்கி செல்வி என்பது தெரியவந்துள்ளது. 

இவருக்கு கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தான் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கு முன்பு இசக்கி செல்வி மாயமாகி இருக்கிறார். அவரை காணவில்லை என்று உறவினர்கள் தேடி வந்துள்ளனர். நான்கு நாட்களுக்கு முன்பாக அதே பகுதியில் இருக்கும் வேறொரு இளைஞரை அவர் திருமணம் செய்துள்ளார். 

இதற்கு இருதரப்பு பெற்று வரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இசக்கு செல்வி தனது கணவருடன் தனியாக உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்பொழுது, கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. 

பின்னர் சண்டை போட்டுக் கொண்டு இசக்கி செல்வி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவரை வேறொரு இளைஞர் மோட்டார் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். அவர்தான் இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thenkasi women died after marrying 4 days


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->