கள்ளக்காதலனுடன் 3 முறை ஓட்டம் பிடித்த பெண்.! அழுகிய பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம்.!
Thiruvallur Illegal affair Goes wrong for women
திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற எருமைவெட்டிப்பாளையம் பகுதியில் பாபு என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மனைவி அமுதா மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். அதே பகுதியை சேர்ந்த ஜோதீஸ்வரன் என்ற நபருடன் அமுதாவுக்கு ரகசிய உறவு ஏற்ப்பட்டுள்ளது.
இதனால், அமுதா 20 நாட்கள் தனது காதலனுடன் குழந்தைகளை விட்டுவிட்டு ஓடிவிட்டார். பாண்டிச்சேரியில் இருந்த அமுதாவை உறவினர்கள் பேசி சமாதனப்படுத்தி அழைத்து வந்து மீண்டும் குடும்பத்துடன் இணைத்தனர். சிறிது நாட்கள் கழித்து மீண்டும் அமுதா தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
மறுநாளே உறவினர்கள் அவரை கண்டறிந்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். மீண்டும் 3-வது முறை அமுதா காதலனுடன் ஓட்டம் பிடித்தார். 2 மாதங்கள் ஆன நிலையில் குழந்தைகளுக்காக கணவர் பாபு அமுதாவை தேடி பல இடங்களில் அலைந்துள்ளார் . பின்னர் நண்பர் கொடுத்த தகவலின் படி ஒரு வீதியில் மனைவி நிற்பதை தேடிச் சென்று பார்த்தபோது தனது காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி அங்கிருந்து அமுதா புறப்பட்டு சென்றுள்ளார்.
பின்னர், அவர் பெரிய குப்பம் கம்பர் தெருவில் இருக்கும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அங்கு ஓடிச் சென்று பாபு பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் அமுதா இறந்து கிடந்தார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Thiruvallur Illegal affair Goes wrong for women