பதற்றமான தொகுதியாக உருமாறிய திருச்செந்தூர்?... அதிமுக வேட்பாளரை லாரி வைத்து தூக்க பிளான்?..! - Seithipunal
Seithipunal


அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜய் மக்கள் இயக்கத்தினர் இரண்டு பிரிவாக பிரிந்துள்ள நிலையில், கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளராக கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணனும், திமுக சார்பில் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனும் வேட்பாளராக களம் இறங்கியுள்ளனர். அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பில்லா ஜெகன் என்பவர் மணப்பாட்டில் களப் பணியாற்றி வருகிறார். 

அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக திருச்செந்தூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்க தலைவர் முத்துவேல் பாண்டி என்கிற குட்டி தனது ஆதரவாளர்களுடன் களப் பணியாற்றி வருகிறார். அந்த தொகுதியில் ஏற்கனவே இரு கட்சிகளும் வேட்பாளர்களும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் விஜய் மக்கள் இயக்கத்திற்கிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், தனது கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக திருச்செந்தூர் ஒன்றிய விஜய் மக்கள் இயக்க தலைவரான குட்டியை செல்போனில் அழைத்த பில்லா ஜெகன், அதிமுகவிற்கு குட்டி வேலை செய்யக்கூடாது என்று மிரட்டியுள்ளார். மேலும், வரும் 3 ஆம் தேதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எம் ராதாகிருஷ்ணனின் கார் மீது லாரி மோதி விட்டு கொலை செய்யப் போவதாகவும், பாம் வைத்து அவரைக் கொலை செய்யப் போவதாகவும் பில்லா ஜெகன் கடுமையாக மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில், பில்லா ஜெகன் மீது மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், தனது உறவினர் குட்டியை மிரட்டிய தகவலறிந்த பனங்காட்டு மக்கள் கழகம் தலைவர் சுபாஷ் பண்ணையார், பில்லா ஜெகனை போனில் தொடர்பு கொண்டு எச்சரித்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. 

இதனால் திருச்செந்தூர் பகுதியில் சாதிய மோதல் ஏற்படும் வகையில் இரு தரப்பு கோஷ்டிகள் மோதிக்கொள்ளும் சூழ்நிலையில், இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், தென் மாவட்டத்தில் திருச்செந்தூர் தொகுதி பதற்றமான தொகுதியாக மாறியுள்ளதால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் காவல்துறையினர் பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Thiruchendur AIADMK and DMK Fight 31 March 2021


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->