பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக - பாமக - பாஜக - த.மா.க உட்பட பல கட்சிகள் இணைத்து தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கூட்டணிக்கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டணி வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சார கூட்டம் தாராபுரத்தில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், " இந்திய திருநாட்டை வளர்ந்த நாடுகளின் வரிசையில் பிரதமர் மோடி நிலைநிறுத்தியுள்ளார். தாராபுரத்திற்கு வந்துள்ள இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள். சுதந்திர இந்தியாவிற்கு பின் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி இந்தியாவை சீரழித்துள்ளது. 

காங்கிரசோடு கூட்டணியமைத்து ஆட்சி செய்த திமுக, மத்தியிலும் மாநிலத்திலும் எந்த வளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. இந்திய அளவில் காங்கிரசும், மாநில அளவில் திமுகவும் எந்த வளர்ச்சியும் உதவி செய்யவில்லை. மருத்துவக்கல்லூரி திறக்க காங்கிரஸ் ஆட்சியில் அனுமதி வாங்க முடியாமல் தவித்தோம். 

இன்று பிரதமர் மோடி தலைமையில் 11 மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. திமுக - காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. மெரினாவில் மக்கள் எனது ஆட்சிக்காலத்தின் போது போராடினார்கள். 

பிரதமர் மோடியை சென்று சந்தித்து, 15 இலட்சம் மக்கள் போராடுகிறார்கள் என்று கூறினேன். இதனைப்போன்று உலக நாடுகளிலும் போராட்டம் பரவுகிறது என்று தெரிவித்தேன். 24 மணிநேரத்தில் 4 துறைகளுக்கு அரசாணை வழங்கி, ஜல்லிக்கட்டில் உண்மையான கதாநாயகனாக பிரதமர் மோடி விளங்கினார். 

நாட்டு மக்களின் நலன்கருதி மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்குள்ள பல்வேறு திட்டத்தை செயல்படுத்தினார். 2023 ஆம் வருடத்திற்குள் தமிழகத்தில் அனைவருக்கும் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். 

திருமணத்திற்கு பெண்களுக்கு நிதிஉதவி திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. திமுக வாக்குறுதிப்படி 2 ஏக்கர் நிலம் கொடுத்தார்களா?. இதனை நான் கேட்கையில், அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு கோபம் வந்துவிட்டது. செய்வோம் என்று அலட்சியமாக கூறி கலைஞர் அமர்ந்துவிட்டார். பல சமூக பாதுகாப்பு திட்டங்கள் அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruppur Dharapuram OPS SPeech about Modi 30 March 2021


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->