வேலூர் : காலை சிற்றுண்டி திட்டத்தினை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
TN CM MK Stalin inspected Vellore school
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இரண்டு நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் வேலூர் அலமேலுமங்காபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு சரியாக வழங்கப்படுகிறதா என அவரே உண்டு ஆய்வு செய்தார்.
அதேபோல் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிமாறினார். அதனைத் தொடர்ந்து இன்னும் பல இடங்களில் ஆய்வு செய்யப்பட உள்ளதாகவும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
English Summary
TN CM MK Stalin inspected Vellore school