தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்.!
Today heavy rain in 19 district in tamilnadu
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், கரூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோபோல நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மறுநாள் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், ஜூலை 31-ஆம் தேதி பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Today heavy rain in 19 district in tamilnadu