தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!
Today heavy rain in 22 districts in tamilnadu
தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு டுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தென்காசி, திருப்பத்துார், திருச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 22 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
மேலும், குமரி கடல் , மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
English Summary
Today heavy rain in 22 districts in tamilnadu