தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்திற்கு இன்று (செப்டம்பர் 7 ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா 07.09.2022 ( புதன் கிழமை ) இன்று நடைபெறுவதால் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் வெளியூர்களிலிருந்து பெருமளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனால் குடமுழுக்கு விழா நடைபெறும் நாளான 07.09. 2022 ( புதன் கிழமை ) இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு 01.10.2022 ( சனிக்கிழமை ) அன்று வேலை நாளாக இருக்கும் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today local holiday for dindugal district


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->