#BREAKING : கனமழை காரணமாக.. இன்று 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
Today school holiday in 3 districts due to heavy rain
வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதன் காரணமாக இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் ஆகிய 15 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் பெய்துவரும் கனமழை காரணமாக இன்று (டிசம்பர் 12ம் தேதி) தமிழகத்தில் குறிப்பிட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.
English Summary
Today school holiday in 3 districts due to heavy rain