இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற பின் முதல் முறை தலைமை அலுவலகம் செல்கிறார் - எடப்பாடி பழனிசாமி..!
Tomorrow EPS Going to the Head office of AiADMK
நாளை அதிமுகவின் தலைமை அலுவகலத்திற்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகைதருவார் என அக்கட்சி சார்ப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்படுள்ளதாவது,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும் , சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் , தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு . எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் , 8.9.2022 - வியாழக் கிழமை காலை 10 மணியளவில் , தலைமைக் கழகம் - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் . மாளிகைக்கு வருகை தந்து , தலைமைக் கழக வளாகத்தில் உள்ள கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் , இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது திருஉருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து , மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார் .
இந்த நிகழ்ச்சியில் , தலைமைக் கழகச் செயலாளர்கள் , மாவட்டக் கழகச் செயலாளர்கள் , கழக நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் , முன்னாள் அமைச்சர்கள் , முன்னாள் நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் , கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் , கழக உடன்பிறப்புகள் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.
English Summary
Tomorrow EPS Going to the Head office of AiADMK