மாப்பிள்ளை பார்க்க சென்று வருகையில் சோகம்.. விபத்தில் 3 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


மாப்பிள்ளை வீட்டிற்க்கு சென்ற பெண் வீட்டார், திரும்பி வருகையில் விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பரதராமி வி.டி பாளையம் கிராமத்தை சார்ந்த இளம்பெண்ணிற்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருந்துள்ளது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காரை பகுதியை சார்ந்த மாப்பிள்ளை வீட்டிற்கு, பெண் வீட்டார்கள் மினிவேனில் புறப்பட்டு சென்றுள்ளனர். 

மாப்பிள்ளையை பார்த்துவிட்டு அனைவரும் மாலை நேரத்தில் மீண்டும் மினிவேனிலேயே ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். இந்நிலையில், காட்பாடி அருகேயுள்ள திருவலம் கூட்டுரோட்டில் வருகையில், திடீரென மினிவேனின் பின்புற டயர் வெடித்துள்ளது. 

இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த மினிவேன் தலைகுப்பற கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், வேனின் ஓட்டுநர் உட்பட 31 பேர் படுகாயமடைந்து உயிருக்கு அலறித்துடித்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள், காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த திருவலம் காவல்துறையினர் அனைவரையும் மீட்டு வாலாஜா மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில், சிகிச்சை பலனின்றி வெண்ணிலா (வயது 35), வசந்தா (வயது 45), ரஞ்சிதம் (வயது 55) ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Gudiyatham Bride Relations Died in Accident Police Investigation


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->