17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.. இன்று கனமழை கொட்டித் தீர்க்கவுள்ள இடங்கள் இவை தான்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, தர்மபுரி, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Weather Report Aug 29 2022


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->