புதிதாக வண்டி வாங்கிய வண்டியில் ஆசையாக சென்ற பெண், அதன் பின் நடந்த சோகம்..!
Woman Death in Accident
சாலை விபத்தில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துகுடி மாவட்டம், புதூரைச் சேர்ந்த சந்தனமகாலிங்கம் மனைவி வீரசெல்வி. இவர் அந்த பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம் புதியதாக மொபட் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை ஓட்டி கொண்டு சொந்த ஊர் திரும்பும் போது செங்கோட்டை அருகே எதிர்பாராத விதமாக மொபட் சாலையில் சரிந்து விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கதினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.