மகாராஷ்டிரா || திருமணத்திற்கு மறுத்த இளம்பெண், வாலிபர் வெறிச்செயல்..! - Seithipunal
Seithipunal


திருமணத்திற்கு மறுத்த இளம்பெண்ணை கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மகாராஷ்டிரா மாநிளம், தென் மும்பை பகுதியை சேர்ந்தவர் அங்கிதா சிவ்கன். இவர் கடந்த மாதம் 31-ந்தேதி வீட்டிலிருந்து மாயமானார். மகளை காணாததால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றொர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இளம்பெண்ணை தேடி வந்தனர்.

இந்நிலையில், தானே மாவட்டம் பயந்தர் உத்தன் பகுதியில் இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த இளம்பெண்ணின்  உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.உடலை ஆய்வு செய்ததில் காணாமல் போன பெண் அங்கிதா சிவ்கன் என தெரியவந்துது. 

இதனை அடுத்து, அந்த இளம்பெண்ணின் செல்போன் எண்ணிற்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்த போது அபிஷேக் என்ற வாலிபர் அவருக்கு அடிக்கடி அழைத்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அவர் அந்த இளம்பெண்ணை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் அவர் திருமணத்திற்கு மறுத்ததால் கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Killed In Maharstra


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->