பில்லி சூனியம் வைப்பதாக மூன்று பெண்கள் கொடூர கொலை.. ஜார்கண்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! - Seithipunal
Seithipunal


பில்லி சூனியம் வைத்ததாக மூன்று பெண்கள் கொலை செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தில் உள்ள ரானாடி கிராமத்தில் மூன்று பெண்கள் பில்லி சூனியம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பெண்கள் செய்த  பில்லி சூனியத்தால் கிராமத்தைச் சேர்ந்த சிலரை பாம்பு கடித்ததாகவும் கூறி, கிராம மக்கள் அவர்களை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம்  குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இறந்துபோன ஒரு பெண்ணிண் கணவர், மகன் உள்பட 13 நபர்கள் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதில், எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்டில் 2001இல் இருந்து 2020 வரை 590 பேர் பில்லி சூனிய விவகாரத்தால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Woman Murder in Jharkhand


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->