#சேலம் || சிறுமியை கடத்தி திருமணம்.. இளைஞர் போக்சோவில் கைது..!
Youth arrested In POCSO
சிறுமியை கடத்தி பாலியல் திருமணம் செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், கருக்கல்வாடி பகுதியில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவரை கச்சாளன் பகுதியை சேர்ந்த கோகுல் என்ற இளைஞர் கடத்தி சென்று திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. மகளை காணவில்லை என அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அங்குள்ள கிராமத்தில் கோகுலின் செல்போன் சிங்னல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் கோகுலை கைது செய்ததோடு அவரை கைது செய்த காவல்துறையினர் சிறுமியை மீட்டனர். அவர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.