தஞ்சாவூர் || மாயமான இளைஞர் சடலமாக மீட்பு, காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


மாயமான இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அருளானந்த நகரை சேர்ந்தவர் ஸ்ரீராம்.  வீட்டை விட்டு வெளியே சென்ற அவர்  வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சூரக்கோட்டை அருகே ஆற்றங்கரையில் ஸ்ரீராம் பிணமாக கரை ஒதுங்கி கிடந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர் தற்கொலை செய்து கொண்டரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Death in Thanjavur


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->