சிகிரெட் நெருப்புப்பட்டதால் மதுப்பான கடையில் நடந்த தகராறு.. இளைஞர் படுகொலை..! - Seithipunal
Seithipunal


சிகிரெட் நெருப்பு பட்டதால் ஏற்பட்ட தகராற்றில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அயனாவரம், வரதம்மாள் கார்டன் தெருவைச் சேர்ந்தவர் குமார். இவர் தனியார் கம்பெனியில் கியாஸ் ஸ்டவ் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். சம்பவதன்று, இவரும் இவரது நண்பர் கார்த்திக் என்பவரும் மது அருந்த சென்றுள்ளனர். அங்கு குமார் சிகரெட் பிடிக்கும்போது அருகில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த முகமது பியாஸ் என்பவர் மீது நெருப்புப்பட்டுள்ளது. இதனால், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த முகமது பியாஸை  வீட்டுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து குமார் மற்றும் கார்த்திக்கை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று பரிதாபமாக பலியானார்.

கார்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், முகமது பியாஸை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Killed in Ayanavaram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->