கொலை நகரமாகும் தலைநகர்.. பழிக்கு பழியாக நடந்த கொலை சம்பவம்..! - Seithipunal
Seithipunal


பழிக்கு பழியாக இளைஞர்களை கொலை செய்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் வசித்து வரும் ரவுடி தேவேந்திரன் என்பவர் கடந்த மார்ச் 31ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையில் முக்கிய குற்றவாளிகளான சுகன் என்ற சுரேந்திரன், விக்கி என்கின்ற விக்னேஷ், புளி மூட்டை என்கின்ற சதீஷ், சுதாகர், அன்சாரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கடந்த மாதம் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்தனர். இந்நிலையில், தேவேந்திரன் கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் சுகேந்தரன், விக்னேஷை மர்ம கும்பல் ஒன்று கத்தி அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஓட ஓட விரட்டி வெட்டினர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தேவேந்திரனை கொலை செய்ததற்கு பழிக்கு பழியாக அவர்கள் கொலை செய்யப்பட்டனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து கொலை சம்பவத்தில் தொடர்புடைய மூவரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youths murder in Chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->