Orange Alert: தமிழ்நாட்டில் 12 மாவட்டத்தில் கன மழை நீடிக்கும்.!! வானிலை மையம் எச்சரிக்கை.!!
Heavy rain continue in 12 districts in tamilnadu
காற்று திசையின் வேக மாறுபாடு காரணமாக ஆந்திராவில் இருந்து கிளம்பிய கருமேகங்கள் தற்போது தமிழகத்தின் வட மாவட்டங்களை ஆக்கிரமித்துள்ளன. இன்று அதிகாலை முதல் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது வரை மழை நீடித்து வரும் இந்த சூழலில அடுத்த மூன்று மணி நேரத்திற்கு திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Heavy rain continue in 12 districts in tamilnadu