தமிழ்நாட்டில் "இந்த 14 மாவட்டங்களில்" கன மழைக்கு வாய்ப்பு.!! வானிலை மையம் எச்சரிக்கை.!!
Tomorrow Heavy rain will occur in 14 districts in tamilnadu
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. தமிழ்நாட்டில் நேற்று நான்கு இடங்களில் வெப்ப அலை வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில்தென்னிந்தியாவில் வரும் நாட்களில் வெப்ப அலை குறைய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.
மேலும் வருகிற 14ஆம் தேதி வரை படிப்படியாக 2 செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும் எனவும் இதனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் வரும் மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகளை ஒட்டிய தெற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடக்கு திசையை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் நாளை 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தில் எச்சரித்துள்ளது.
அதன்படி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 14 மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
English Summary
Tomorrow Heavy rain will occur in 14 districts in tamilnadu