ஈராக்கில் குண்டுவெடிப்பு.. குழந்தை உள்ளிட்ட 8 பேர் பரிதாப பலி.. ! - Seithipunal
Seithipunal


குண்டு வெடிப்பில் 8 பேர் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள டொஸ்ரஹூக் மாகாணத்தில் மலைப் பிரதேசத்தில் தனியார் சுற்றுலா விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் குழந்தை உள்ளிட்ட 8 பேர் பலியானதாகவும் , 23 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த தாக்குதலை துருக்கி நடத்தியதாக ஈராக் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ஈராக் அரசு தெரிவிக்கையில், குர்தீஷ் படைகளை குறிவைத்து நடந்த தாக்குதலில் விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் பலியானதாக தெரிவித்தனர்.  மேலும், இந்த தாக்குதல் ஈராக்கின் இறையாண்மையை குறிவைப்பதாக தெரிவித்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஈராக் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் துருக்கி அரசு தன் மீதான குற்றசாட்டை மறுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 persons Death in bam attack


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->