காதலர் தின திருட்டு பரிசு.. ஒரே சிறை, குறுக்கே சுவர்.. மனமகிழ்ச்சியில் சிங்கிள்ஸ்.! - Seithipunal
Seithipunal


காதல் தின பரிசாக திருட்டு ஒட்டகக்குட்டியை வழங்கி, காதலியையும் சேர்த்து கம்பிஎண்ண வைத்துள்ள காதலன் குறித்த சம்பவம் சிங்கில்ஸ்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 14 பிப்ரவரி 2021 அன்று காதலர் தினம் உலகம் முழுவதும் வெகு விமர்சையாக சிறப்பிக்கப்பட்டது. காதலர்கள் தங்களுக்கு பிரியமானவர்களுக்கு பல வகையான பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர். இந்நிலையில், துபாயில் வசித்து வந்த அமீரக வாலிபர், காதலிக்கு காதல் தின பரிசு வழங்க முடிவு செய்துள்ளார். 

இதனையடுத்து, அங்குள்ள ஒட்டக பண்ணைக்கு திருட்டுத்தனமாக சென்ற வாலிபர், ஒட்டக பண்ணை உரிமையாளருக்கு தெரியாமல் ஒட்டக குட்டியை திருடி காதலிக்கு பரிசு கொடுத்துள்ளார். உண்மை தெரியாத காதலி, பரிசை பெற்றுக்கொண்டு மிகுந்த இன்பத்திற்கு உள்ளாகியுள்ளார். 

இந்நிலையில், ஒட்டகப்பண்ணையின் உரிமையாளர் பிறந்து சிலமணிநேரம் ஆகிய ஒட்டகம் மாயமாகியதை அறிந்து, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். 

இதற்குள்ளாக, ஒட்டக பண்ணையில் ஒட்டகக்குட்டி மாயமாகியுள்ளதும், அதனை காவல் அதிகாரிகள் தேடி வருவதும் காதல் ஜோடிகளுக்கு தெரியவந்துள்ளது. காவல்துறையினர் வசம் இருந்து தப்பிக்க இயலாது என்பதால் ஒட்டக குட்டியை பண்ணையின் வாசலில் வாலிபர் விட்டுவிட்டு வந்துள்ளார். பின்னர் அவரே காவல் துறையினருக்கு தொடர்பு கொண்டு, ஒட்டகக்குட்டி பண்ணைக்கு வெளியே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, காதலிக்காக ஒட்டகக்குட்டியை திருடியதும், பின்னர் காவல்துறைக்கு பயந்து மீண்டும் இங்கேயே கொண்டு வந்து விட்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காதலி மற்றும் காதலனை கைது செய்த காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Arab boy gift Stolen Camel Baby to his Love girl during Lovers Day Police arrest


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->