திருமணத்திற்கு முன் நெருக்கம் காட்டினால் சிறை.. அமலாகவுள்ள புதிய சட்டம்.!
Indonesia keep new law about love relationship
திருமணத்திற்கு முன்னதாக உடலுறவு கொள்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என இந்தோனேசியா அரசனது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த சட்டமானது வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் பொருந்தும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த சட்டம் விரைவில் நாட்டில் அமலாக உள்ளதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பின் திருமணத்தை தாண்டிய உறவால் பாதிக்கப்படுகின்ற கணவனோ அல்லது மனைவியோ புகார் கொடுக்கலாம் என்றும் அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருமணத்திற்கு முன்பாக ஏற்படும் உறவு பற்றி பெற்றோர்கள் புகார் கொடுக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தற்போது பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.
English Summary
Indonesia keep new law about love relationship