பிறந்த குழந்தைகளுக்கு விஷ ஊசி செலுத்தி கொன்ற சைக்கோ செவிலியர் கைது..!
Nurse Killed a babies
பிறந்த குழந்தைகளுக்கு விஷ ஊசி செலுத்தி கொன்ற செவிலியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அர்ஜென்டினா, கார்டோபாவில் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதங்களுக்கு பிறந்த குழந்தைகளில் 8 குழந்தைகள் ஆரோக்கியமாக பிறந்த சில நாட்களிலேயே உயிரிழந்தனர். இறந்த குழந்தைகளின் உடலில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவர்கள் உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, நடத்திய விசாரணையில் பிரெண்டா அகுவேரா என்ற செவிலியர் குழந்தைகளுக்கு விச ஊசி செலுத்தியது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும், 9 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேறொண்டு வருகின்றனர்.