விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய ரஷியா.! - Seithipunal
Seithipunal


சீனாவில் உருவாகி உலக நாடுகளையே அச்சுறுத்திய கொரோனா வைரஸின் தாக்கமானது ஒரு வருடத்திற்கும் மேலாக அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க உலக நாடுகள் பல்வேறு முயற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

மேலும், அந்தந்த நாடுகளின் சார்பில் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மனிதர்களிடையே கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், ரஷியா விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. கார்னிவாக் - கோவ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள ரஷிய தடுப்பூசி விலங்குகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷிய அதிகாரி தெரிவிக்கையில், " கடந்த வருடத்தின் அக்டோபர் மாதத்திலேயே கார்னிவாக்-கோவ் தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் நாய்கள் மற்றும் பூனைகள், ஆர்டிக் நரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகளில் விலங்குகளுக்கான நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்தது. இதனை வாங்க அமெரிக்கா, கனடா, போலந்து, ஆஸ்திரேலியா, கிரீஸ், சிங்கப்பூர் நாடுகளை சார்ந்த மருந்து நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia Makes Animal COVID Vaccine 2021


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->