கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழப்பு, 60 பேர் காயம்..மகா கும்பமேளாவில் சோகம்!   - Seithipunal
Seithipunal


மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் படுகாயமடைந்தனர்.இந்த சம்பவம் நடந்த நிலையில், பல மணி நேரம் கழித்து, மகா கும்பமேளாவின் டி.ஐ.ஜி. வைபவ் கிருஷ்ணா உயிரிழந்தவர்களின் விவரங்களை தெரிவித்தார்.


உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்ந்துவருகிறது . இந்த கும்பமேளாவில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் மற்றும் பிரபலங்கள் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

இந்நிலையில், அமாவாசை தினமான நேற்று மகா கும்பமேளாவில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள்குவிந்தனர். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் யாத்ரீகர்கள் வருகை தந்ததை அடுத்து ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடந்த நிலையில், பல மணி நேரம் கழித்து, மகா கும்பமேளாவின் டி.ஐ.ஜி. வைபவ் கிருஷ்ணா உயிரிழந்தவர்களின் விவரங்களை தெரிவித்தார்.

இதுகுறித்து டி.ஐ.ஜி. வைபவ் கிருஷ்ணா  மேலும் கூறுகையில்:"ஒரே நேரத்தில் கூட்டம் அதிகரித்ததால் தான் இந்த சம்பவம் நடந்தது என்றும்  மேலும், கூட்டத்தினர் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மறுபுறம் குதித்து, அங்கிருந்தவர்களையும் நசுக்கியது என்றும் கூட்ட நெரிசலில் படுகாயமடைந்த 90-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும்  அவர்களில் 30 பேர் உயிரிழந்தனர்," என்று அவர் கூறினார்.

மேலும் உயிரிழந்தவர்களில் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  கூறிய அவர் ,அவர்களில் நான்கு பேர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள்என்றும்  தலா ஒருவர் அசாம் மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் படுகாயமடைந்தவர்களில் 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மீதமுள்ளவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர்களது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என கூறினார்.

மேலும் கிட்டத்தட்ட ஏழரை கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று மகா கும்பமேளாவில் நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் , கூட்ட நெரிசலுக்கான காரணங்களை ஆராய நீதிபதி ஹர்ஷ் குமார், முன்னாள் டி.ஜி. வி.கே. குப்தா மற்றும் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். வி.கே. சிங் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட நீதித்துறை ஆணையத்தை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நியமித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

At least 30 killed, 60 injured in stampede Tragedy at Maha Kumbh Mela


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->