தனியார் மருத்துவமனையில் தீ விபத்து : 10 பேர் பலி.!
madhya pradesh private hospital fire Accident
மத்தியப் பிரதேசம் : ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
மருத்துவமனையின் ஒரு இடத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. இதனால், சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
முதல்கட்ட தவலின்படி, இந்த தீ விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து முதலில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) தீ பற்றி உள்ளது.
பின்னர், மருத்துவமனையின் மற்ற பகுதிகளுக்கும் பரவியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தீ விபத்தில் மரணமடைந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று, மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.
English Summary
madhya pradesh private hospital fire Accident