தோல் நோயால் தூக்கு போட்டு இறந்த கல்லூரி மாணவி.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டியில் இந்திரா காந்தி தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் மனைவி செல்வி. இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில், ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டார். மேலும் இரண்டு மகள்களுக்கு திருமணமானதால், செல்வி தனது கடைசி மகளான காவ்யாவுடன் வசித்து வந்தார். 

இந்நிலையில், காவ்யா பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி. ஊட்டச்சத்து-உணவியல் படிப்பில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இதற்கிடையே காவ்யாவிற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தோல் நோய் ஏற்பட்டு, அதற்காக பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், தனியார் சித்த மருத்துவத்திலும் சிகிச்சை பெற்று வந்தார். 

இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக காவ்யா தோல் நோயால் மிகவும் அவதிப்பட்டு, கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அப்போது அவரது தாய் செல்வி மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பெரம்பலூருக்கு சென்றுள்ளார். 

அதன் பின்னர் வீடு திரும்பிய செல்வி வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, காவ்யா துப்பட்டாவால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறினார். இந்த சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த பின்பு, பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.

இந்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near perambalur college student died for Skin disease


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->