70 லட்சம் அட்டைகளுக்கு ரேஷன் பொருள் கிடைக்காது - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் உள்ள மக்களுக்காக பொது விநியோக சட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் படி, அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

இந்தத் திட்டத்தில் தொடர்ந்து பயனடைய வேண்டுமென்றால், சில நிபந்தனைகளை குடும்ப அட்டைதாரர்கள் கடைபிடிக்க வேண்டும். போலி குடும்ப அட்டைதாரர்களை தவிர்ப்பதற்காக மத்திய அரசு e-KYC முறையை கட்டாயமாக்கியுள்ளது. மோசடி நடவடிக்கைகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை உதவுகிறது. 

இந்த நடவடிக்கையானது வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதையும், பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் சரியான மக்களுக்கு சென்றடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு e-KYC செயல்முறையை முடிக்க 2 வழிகளை வழங்குகிறது. 

அதாவது இந்த முறையை ஒரு முறை கடவுச்சொல் (OTP) அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் முடிக்கலாம். இந்த முறையை மார்ச் 31ஆம் தேதிக்குள் அப்டேட் செய்ய மத்திய அரசு கெடு விதித்துள்ளது. 

ஆனால், இதுவரைக்கும் 70 லட்சம் பேர் e-KYC அப்டேட் செய்யவில்லை. அவர்கள் அதை செய்யவில்லை என்றால், குடும்ப அட்டைகள் ரத்தாக வாய்ப்புள்ளது" என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

no ration thinks to 70 lakhs ration card in india


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->