இந்திய பார் கவுன்சிலின் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் மார்ச்சு 02 இல்..! - Seithipunal
Seithipunal


இந்திய பார் கவுன்சில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் மார்ச் 02-ந்தேதி நடைபெறும் என, தலைவர் மனன் குமார் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு  நாளை கடைசி நாளாகும். மேலும், மார்ச் 01-ந்தேதி வரை வேட்பு மனுவை திரும்பப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பார் கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் பதவிக்காலம் இரண்டு வருடம் ஆகும்.

மூத்த வழக்கறிஞரான மிஷ்ரா, மாநிலங்களவை எம்.பி.யாகவும் உள்ளார். கடந்த ஆறுமுறை இவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக இருக்கும் மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் கடந்த மூன்று வருடங்களாக அப்பதவியில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Bar Council of India will hold elections for the posts of Chairman and Vice Chairman on March 2


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->