அது முதலமைச்சரின் முடிவு - கனிமொழி பேட்டி! - Seithipunal
Seithipunal


சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், அக்கட்சி நாடாளுமன்றக்குழு தலைவருமான கனிமொழி அளித்த பேட்டியில், "துணை முதலமைச்சராக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும், யார் பொறுப்பேற்க வேண்டும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டிய முடிவு.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பை, பொறுப்பை வழங்கி இருக்கிறார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாஇன்று நடைபெற்றது. இதில், 2 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். மேலும், செந்தில்பாலாஜி, ஆவடி நாசர் மீண்டும் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சார துறை மற்றும் மதுவிலக்கு துறை ஒதுக்கீடு.

இரா. ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை, கரும்பு ஆயத்தீர்வை மற்றும் கரும்பு வளர்ச்சித் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஆவடி நாசருக்கு சிறுபான்மை மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கோவி. செழியனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deputy CM Udhay DMK Kanimozhi 


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->