திமுக அமைச்சர் சொத்துக்குவிப்பு வழக்கு: இன்று தீர்ப்பு வழங்கும் உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


#MinisterDuraiMurugan #DMK #ChennaiHC 

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்ததை எதிர்த்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. 

வழக்கு விவரம்:

1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், தனது வருமானத்தைவிட அதிகமாக ரூ.3.92 கோடி மதிப்பிலான சொத்துகளை குவித்ததாக, அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.  

விடுவிப்பு:

இந்த வழக்கில் துரைமுருகன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் சகோதரர் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் விடுக்கப்பட்டன. பின்னர், வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், அவர்கள் அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.

மறுஆய்வு மனு:

இந்த தீர்ப்பை எதிர்த்து 2013ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை, சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதி பி. வேல்முருகன் விசாரித்தார். அரசு தரப்பில் கூடுதல் வழக்குரைஞர் ஜெ. ரவீந்திரன், எஃப்ஐஆர் மற்றும் குற்றப்பத்திரிகை விவரங்களை விளக்கினார்.

துரைமுருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் சித்தார்த் லுத்ரா, பி. வில்சன் ஆகியோர், குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், சொத்துக்கள் வழக்குப் பதியப்படும் முன்பே வாங்கப்பட்டவை என்றும் வாதிட்டனர். பினாமி என குறிப்பிடக்கூடிய ஆதாரமில்லை என்றும், உரிய வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் விளக்கினர்.

மேலும், வழக்குப் பதிக்க சட்ட அனுமதி பெறப்படவில்லை என்றும் வலியுறுத்திய நிலையில், நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்து கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Minister Duraimurugan case HC Judgement today


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->