என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்.. செந்தில் பாலாஜி உருக்கம்!
DMK Senthil Balaji say about Stalin meat
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
15 மாதங்களுக்குப் பிறகு நேற்று செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி தீர்ப்பளித்தது.
குறிப்பாக சாட்சிகளிடம் பேசினாலோ, சாட்சிகளை கலைக்க முயற்சி செய்தாலும் பிணை உடனடியாக ரத்து செய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு திமுகவினர் உற்சாகமான வரவேற்பை அளித்தனர்.
இந்நிலையில், இன்று இரவு முதலமைச்சர் மு க ஸ்டாலினை சென்னை விமான நிலையத்தில் செந்தில் பாலாஜி சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள செந்தில் பாலாஜி, "471 நாட்கள் தனிமையின் இருள் நீங்கி சூரியனின் காலடியில்.
ஒவ்வொரு நாளும், நிமிடமும், நொடியும் உங்களையே நினைத்திருந்தேன் தலைவரே.!
தாயுமானவராய் தாங்கினீர்கள்.. என் உயிர் உங்கள் காலடியில் சமர்ப்பணம்..
உங்கள் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்" என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
English Summary
DMK Senthil Balaji say about Stalin meat