இதுவே இஸ்லாம், கிறிஸ்தவம் குறித்து பேச உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? - நடிகை குஷ்பு விளாசல்! - Seithipunal
Seithipunal


இந்து மதத்தை அவமரியாதை செய்வதை யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "திருப்பதி லட்டு விவகாரத்தில் நான் கவனித்ததெல்லாம் எப்போதெல்லாம் இந்து மதம் குறி வைக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள் என்ற மனோபாவத்தோடு இருக்கும்படி நமக்கு அறிவுரைகள் அழுத்தமாக வந்து கொண்டு இருக்கிறது.

அது ஏன்? என்று இந்து மதத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். இதுவே இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் குறித்து இப்படி பேச உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? வேறு எந்த மதத்தை பற்றி தவறாக பேச நினைத்தாலே உங்கள் முதுகெலும்பு நடுங்குகிறது.

மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் மதித்தல் ஆகும். மாறாக பாரபட்சம் காட்டுவது இல்லை. நான் இஸ்லாத்தை பின்பற்றும் நான், கடவுள் மீது பக்தியும், நம்பிக்கையும் கொண்ட இந்து குடும்பத்தில் திருமணம் செய்து கொண்ட ஒரு இந்து. எனக்கு எல்லா மதங்களும் ஒன்றுதான்.

இந்து மதத்தை அவமதிக்கவோ, சாதாரணமாகவோ எடுத்து கொள்ளவோ கூடாது. எந்த விதமான அவமரியாதையையும் பொறுத்து கொள்ள முடியாது. கலப்படம் செய்யப்பட்ட திருப்பதி லட்டு உலகெங்கிலும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளையும், நம்பிக்கையையும் புண்படுத்துகிறது.

இதற்கு பொறுப்பானவர் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும். எல்லாவற்றையும் வெங்கடேச பெருமான் பார்த்துக் கொண்டிருக்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lattu Controversy Khushbu Hinduism 


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->