என்னை கைது செய்ய என்ன அவசரம்? நான் உங்களை போல அஞ்சி ஊடுபவன் அல்ல - சீமான் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


இன்று ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தாவது, "என் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், என் பாதுகாவலர் மற்றும் உதவியாளரை போலீசார் அழைத்துச் சென்றதை கண்டிக்கிறேன்.

சம்மன் ஒட்டப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்படுவது எனக்கு அவமானமாக இல்லை. என்னை அவமதிக்க நினைக்கும் திமுக அரசு, இதில் தன்னைத்தானே அவமதிக்கிறது.  

நாளை தருமபுரியில் முக்கிய கலந்தாய்வு கூட்டம் உள்ளதால், போலீஸ் விசாரணைக்கு ஆஜராக முடியாது. ஆனால், நான் விசாரணைக்கு ஆஜராகுவேன் என்று ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். எனவே, என்னை கைது செய்ய என்ன அவசரம்?  

என் மீது புகார் அளித்த பெண்ணிடம் குற்றச்சாட்டுக்கான தெளிவான ஆதாரங்களை போலீசார் கேட்க வேண்டும். மேலும், என்னையும் அந்த பெண்ணையும் ஒரே இடத்தில் அமர வைத்து நேரடியாக விசாரணை நடத்த வேண்டும்.  

பெரியார் விவகாரத்தில் என்னை சமாளிக்க முடியாத திமுக அரசு, இப்போது இந்தப் பெண்ணை முன்வைத்து எனக்கு எதிராக புது நாடகமொன்றை தொடங்கியுள்ளது. இந்த நாடகத்தை எப்படி நடத்தப்போகிறார்கள் என்பதை பார்த்துகொள்ள காத்திருக்கிறேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NTK Seeman Condemn to DMK Govt


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->