எடப்பாடிக்கு புத்தி சொல்ல அறிவாளி அமைச்சர்கள் யாரும் இல்லையா? : சரமாரியாக வெளுத்து வாங்கிய சசிகலா புஷ்பா!
எடப்பாடிக்கு புத்தி சொல்ல அறிவாளி அமைச்சர்கள் யாரும் இல்லையா?
உயர்த்தப்பட்ட பேருந்து கட்டண விவகாரத்தில் அரசுக்கு ஆலோசனை கூற அறிவார்ந்த அமைச்சர்கள் யாரும் இல்லையா என்று அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா புஷ்பா கூறியதாவது: தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்திருந்தார்.

மக்களிடம் இருந்து பணம் வாங்கித் தான் போக்குவரத்துக் கழகத்தில் ஏற்பட்டுள்ள கடனை ஆட்சியாளர்கள் சரிசெய்ய வேண்டுமா? வேறு வழிகளில் இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு, ஆலோசனை கூற அறிவார்ந்த அமைச்சர்கள் யாரும் இல்லையா?
10 கோடி ரூபாய் கடனை தீர்ப்பதற்காக தமிழக மக்கள் படும் கஷ்டம் என்ன என்பதை ஆராய்ந்து பார்ப்பது தான் அறிவார்ந்த அரசியல். கரூர் மாவட்டத்தில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது கைது நடவடிக்கை எடுத்திருப்பது துரதிருஷ்டவசமானது.
டி.டி.வி.தினகரன் அணியினர் சார்பில் நடைபெற இருக்கும் எம்ஜிஆர். பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு தடை ஏற்படுத்துவது என்பது அராஜக அரசியல் ஆகும்.
எம்ஜிஆரின் பெயரை சொல்லி இரட்டை இலை சின்னம் வைத்திருந்தால் மட்டும் தகுதி ஆகிவிடாது. எம்ஜிஆரின் பிறந்தநாள் விழாவிற்கு எதிர்க்கட்சி போலவே சுவர் விளம்பரம் செய்ய தடை ஏற்படுத்துவது, எதிரி அரசியல் பகை உணர்வாக உள்ளது.
இவர்கள் செய்யும் இதனை மக்களும், தொண்டர்களும் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். அனைவரும் டி.டி.வி.தினகரன் பக்கம்தான் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary
sasikala pushpa slams admk