ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: விஜய் கொடுத்த ஷாக் பதில் - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லி சட்டமன்ற தேர்தலுடன், தமிழகத்தின் ஈரோடு கிழக்கு மற்றும் உத்தரபிரதேசத்தின் மில்கிபூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என்று அறிவித்து அரசியல்  களத்திற்கு வந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vijay about erode by election


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->