ஐ.பி.எல். 2025 : கொல்கத்தா அணி ஆலோசகராக சி.எஸ்.கே முன்னாள் வீரர் நியமனம்!...யார் அவர்?
IPL 2025 Former CSK player appointed as Kolkata team advisor Who is he
மும்பையில் ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நிறைவடைந்தது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து ஐ.பி.எல் அணிகளின்
உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அப்போது பல்வேறு அணிகள் தரப்பிலும் ஏராளமான கருத்துகளை பெற்றுக் கொண்ட பிசிசிஐ, அதுதொடர்பாக விரிவாக ஆலோசித்து வருகிறது.
மேலும் பல்வேறு அணிகள் தரப்பிலும் அதிகளவிலான வீரர்களை ரிடென்ஷன் செய்யும் வகையில் விதிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த அணிக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு முடிவுகளை எடுக்க பி.சி.சி.ஐ.-க்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டுள்ளது.
தொடர்ந்து 2025 ஐ.பி.எல்.தொடர் வீரர்களுக்கான மெகா ஏலம் நவம்பர் மாத இறுதியில் பி.சி.சி.ஐ. நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கொல்கத்தா அணியின் ஆலோசகராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் டுவெய்ன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
English Summary
IPL 2025 Former CSK player appointed as Kolkata team advisor Who is he