கள்ளச்சந்தையில் ''IPL டிக்கெட்டுகள்'' விற்பனை - 12 பேர் அதிரடி கைது.!
IPL tickets Selling fake market 12 people arrested
சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 39வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ 19.3 ஓவர்களில் நான்கு விக்கெட் இழந்து 211 ரன்கள் எடுத்து அபார வெற்றி அடைந்தது.
இந்நிலையில் சென்னை - லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது களச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மேலும் இது குறித்து 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 56 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
English Summary
IPL tickets Selling fake market 12 people arrested