இருவரும் உல்லாசம் அனுபவிக்கலாம்!...ஜாதி பெயரை வைத்து தாக்கு!...பெண் விமானி பரபரப்பு புகார்!....நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 35 வயதான பெண் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகாரில், நான் விமானத்தில் விமானியாக பணியாற்றினேன் என்றும், போட்டி தேர்வில் பங்கேற்க விரும்பியதால், நான் பார்த்து வந்த விமானி வேலையை விட்டு விட்டு, போட்டி தேர்வுக்கு தயாராகி வந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில் வசித்து வரும் என்ஜினீயரான ஆனந்தராஜ் என்பவருடன் கடந்த 2023-ம் ஆண்டு முதல் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.

தொடர்ந்து ஆனந்தராஜ் நாம் திருமணம் செய்ய போகிறோமோ இருவரும் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று கேட்டு, வலுக்கட்டாயமாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், மேலும் இதனை வீடியோவாகவும் எடுத்து, அதனை லேப்டாப்பிலும் பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து நான் ஆனந்தராஜிடம் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினேன் இருந்த போதிலும் அவர் என்னை ஜாதி பெயரை சொல்லி திட்டியுள்ளார்.  எனவே என்னை ஏமாற்றி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த என்ஜினீயர் ஆனந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

பெண் அளித்த புகாரின் பேரில் அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Both can have fun Caste name attack Female pilot complains about harassment What happened


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->