போக்ஸோ வழக்கில் திருப்பம்: 7 ஆண்டுகளுக்குப் பின் குமாருக்கு கிடைத்த நீதி! தண்டனையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


கடந்த 2018 ஆம் ஆண்டு போத்தனூர் காவல் நிலையத்தில் குமார் என்பவர் மீது பாலியல் தொல்லை புகார் அளிக்கப்பட்டது. 

அந்த புகாரில், குமார் தனது மகளை காதலிப்பதாக கூறி வீட்டிற்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அது தொடர்பான புகைப்படங்களை காட்டி மீண்டும் மீண்டும் தொல்லை அளித்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் குமார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கோவை போக்சோ நீதிமன்றம், குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தது.

இதனை எதிர்த்து குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குமார் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை கண்டறிந்தது.

பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுபவரின் சகோதரியை, குமார் காதலித்து வந்ததால் அவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதும் விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து, குமாருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பின் குமாருக்கு நீதி கிடைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai HC Pocso case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->