34 தமிழக மீனவர்களுக்கு வரும் 5 ஆம் தேதி வரை காவல்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 439 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்துறை அலுவலக அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றனர்.

அந்த வகையில், தங்கச்சிமடத்தை சேர்ந்த ரூபில்டன், டேனியல், ராமேசுவரம் சச்சின் ஆகியோருக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகளில் கேரளாவை சேர்ந்த 2 பேர் உள்பட மொத்தம் 34 மீனவர்கள் சென்றிருந்தனர். 

அதன் படி அவர்கள் கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக்கொண்டு இருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி 34 மீனவர்களையும் அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று காலை கிளி நொச்சியில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரணை நடத்திய நீதிபதி 34 மீனவர்களையும் வருகிற பிப்ரவரி 5-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

custody to tamilnadu fishermans in srilanga till feb 5th


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->