கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டசபையில், கருணாநிதியின் பெயரில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் முன்வைக்கப்பட்டது. 

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கலைஞர், தமிழக கல்வி வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். அவரால் தான் இன்று தமிழகம் கல்வியில் முன்னேறி மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது,” என்றார்.

“பல்கலைக்கழக வளர்ச்சியின் அடித்தளமாக கலைஞர் இருந்தார். அவர் கல்விக்கான கனவுகள் அனைத்தும் இன்று பலன் தருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களின் உருவாக்கத்துக்கும் விரிவாக்கத்திற்கும் அவரே முக்கியத் தூணாக இருந்தார். இன்று பல்கலைக்கழகங்களை வழிநடத்தும் மையமாகவே அவர் பார்வையிடப்படுகிறார்,” எனவும் அவர் கூறினார்.

மேலும், “தமிழக அரசின் சார்பில் கும்பகோணத்தில் புதிய பல்கலைக்கழகம் விரைவில் நிறுவப்படும். அதன் பெயராக ‘கலைஞர் பல்கலைக்கழகம்’ என்று வழங்கப்படும்,” என உறுதியளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

 Kalaignar University soon in Kumbakonam MK Stalin Announce


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->