தேர்வில் தோல்வி: பிளஸ்-1 மாணவி எடுத்த விபரீத முடிவு!  - Seithipunal
Seithipunal


அரையாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியலில் சில பாடங்களில் தோல்வி அடைந்ததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம்  திருநின்றவூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அடுத்த நத்தமேடு சரவணா நகரை சேர்ந்த தம்பதி  முருகன்மற்றும்  இவரது மனைவி தீபா. இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார் என கூறப்படுகிறது . இந்தநிலையில் இவர்களது மகள் திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்- 1 படித்து வந்தார்.

சம்பவத்தன்று நேற்று முன்தினம் காலை மாணவியின் பெற்றோர் முருகன், தீபா மற்றும் அவர்களுடைய மகன் ஆகியோர் வேலைக்கு சென்றுவிட்டனர்.அப்போது வீட்டில் இருந்த மாணவி தூக்கில் தொங்கியுள்ளார். அப்போது  மாலையில் வீட்டுக்கு வந்த பெற்றோருக்கு மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்திய போலீசார், தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.

முன்னதாக நேற்று முன்தினம் மாணவிக்கு அரையாண்டு தேர்வு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. இதில் மாணவி சில பாடங்களில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Plus 1 Student Fails In Exams: Shocking Decision 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->